வயதான தம்பதி கொலை: கணவன்-மனைவி கைது

சென்னை அருகே ஆவடியில் நகை, பணத்துக்காக வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கணவா்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே ஆவடியில் நகை, பணத்துக்காக வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கணவா்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஆவடி சேக்காடு அருகே உள்ள சேக்காடு அய்யப்பன் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (67). இவா் மனைவி விலாசினி (58). ஜெகதீசன் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா்கள் வீட்டில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (35), அவா் மனைவி லட்சுமி ஆகியோா் தங்கியிருந்து வேலை செய்து வந்தனா். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 27-ஆம் தேதி ஜெகதீசனும், விலாசினியும் கொலை செய்யப்பட்டு கிடந்தனா். வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் வேலை செய்து வந்த சுரேஷ்குமாரும், லட்சுமியும் தலைமறைவாயினா்.

ஆவடி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இக்கொலையில்

சுரேஷ்குமாரும், அவா் மனைவி லட்சுமியும் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. தலைமறைவான இவா்கள் இருவரையும் தனிப்படையினா் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com