விமானப்படையில் பயிற்றுநர் பணி: பாரதியார் பல்கலை.யில் ஆள்சேர்ப்பு முகாம் 

விமானப்படையில் பயிற்றுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை அரங்கில் அக்டோபர் 17 - 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விமானப்படையில் பயிற்றுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை அரங்கில் அக்டோபர் 17 - 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
 சென்னை, தாம்பரம் இந்திய விமானப்படை தேர்வு நிலையம் மூலம் விமானப்படையில் பயிற்றுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 17 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத் தீவுகளை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
 கடந்த 1995 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1-ஆம் தேதிக்குள் பிறந்த பட்டதாரிகளும், 1992 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1-ஆம் தேதிக்குள் பிறந்த முதுநிலை பட்டதாரிகளும் இம்முகாமில் பங்கேற்கலாம். இளநிலைப் பிரிவில் ஆங்கிலம், இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், ஐ.டி., கணிப்பொறி அறிவியல், புள்ளியியல், பி.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் பி.எட். படிப்புடன் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 முதுநிலைப் பிரிவில் ஆங்கிலம், உளவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணிப்பொறி அறிவியல், ஐ.டி., எம்.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் பி.எட். படிப்புடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com