சென்னை: மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்காக நான்குநேரியில் பிரசாரக் கூட்டத்திற்காக வந்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:
பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும்; மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள்.
யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும்.
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது.
நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன்; சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர்
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.