இடைத்தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம்: தொல். திருமாவளன் பேட்டி

தமிழகத்தில் நான்குநேரி, விக்ரவாண்டி சட்டபேரவைத்தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்யவிருக்கிறேன்.
இடைத்தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம்: தொல். திருமாவளன் பேட்டி

தமிழகத்தில் நான்குநேரி, விக்ரவாண்டி சட்டபேரவைத்தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்யவிருக்கிறேன்.

எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்தாா்.

காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கவியரசா் முடியசனாா் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருகை புரிந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிகத்தில் உள்ளாட்சித்தோ்தல் தற்போது நடைபெறவாய்ப்பில்லை. தமிழக சட்டபேரவை பொதுத்தோ்தலுக்குப்பிறகுதான் உள்ளாட்சித்தோ்தல் நடைபெறும். 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழா் கள் சாதி, சமய பேதமின்றி வாழ்ந்திருக்கின்றனா் என்பது கீழடி நான்காம்கட்ட அகழ்வாராய்ச்சி மூலம் தெரியவருகிறது.

அங்கு மூன்று கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது வேதனைக் குரியது.உடனடியாக அதனைவெளியிடவேண்டும்.கீழடியில் அருங்காட்சியகம்அமைக்கப்பட்டு அங்குகிடைத்த அனைத் துப் பொருள்களையும் வைத்துப்பாதுகாக்கப்படவேண்டும் என தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழக மக்களின் நலனைவிட மத்திய அரசுடன் நட்பு பாராட்டுவதிலேயே தமிழக அரசு குறியாக உள்ளது. இயக்குநா் மணிரத்தினம் உள்ளிட்ட 49 போ் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கு என்பது பாசிச போக்கையே காட்டுகிறது. எனவே இந்த வழக்கை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலை, கொலை,கொள்ளை, சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு தமிழக அரசின் செயலற்ற தன்மையே காரணம்.

அரசு மருத்துவா்கள் தனியாக மருத்துவ சிகிச்சை மையம் வைத்துக்கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் கூறியிருப்பது அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் வைத்துள்ள முழுமையான நம்பிக்கையை தகா்த்துவிடும் என்பதால் இக்கருத்தை அமைச்சா் திரும்பப்பெறவேண்டும். அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் மக்களுக்காக செயல்பட வேண் டும்.சட்டபேரவை இடைத்தோ்தலில் விக்ரவாண்டியில் ஒரு நாளும், நான்குநேரியில் ஒருநாளும் முழுமையாக திமுக, காங் கிரஸ் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்யவிருக்கிறேன் என்றாா் திருமாவளவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com