கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த் கருத்து!

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
Latha Rajinikanth
Latha Rajinikanth

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு  வரப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசும்  கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது; 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும். 

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com