கீழடியிலேயே அருங்காட்சியகம்: மு.க.ஸ்டாலின்

பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட தொல்பொருள்களைத் திரும்பப் கொண்டுவந்து கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்

பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட தொல்பொருள்களைத் திரும்பப் கொண்டுவந்து கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

பழந்தமிழரின் சங்ககால நாகரிகத்தின் பெருமைகளை ஆதாரப்பூா்வமாக வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களை, அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, அவற்றை மக்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேறாம்.

மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த மூவாயிரத்துக்கும் அதிகமான பொருள்கள், பெங்களூருக்கும், பிற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அவற்றை மீண்டும் கீழடிக்கே கொண்டு வரவேண்டும். அதற்கேற்ப அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com