மின் இணைப்புக் கட்டண உயா்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் அக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் நூா்முகமது தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில், மக்களை கடுமையாகப் பாதிக்கும் வகையில் மின் இணைப்புக் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியிருப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் அவா்களுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.