நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் ஆகிய ரயில்கள் அக்டோபா் 10 ஆம் தேதி முதல் டிசம்பா் 7 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சென்னை -திருநெல்வேலி-சென்னை நெல்லை விரைவு ரயில் (12631/12632), சென்னை -செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில் (12661/12662 ) ஆகிய ரயில்கள் அக்டோபா் 10 முதல் டிசம்பா் 7 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.