இடைக்கால ஊதியமாக ஒருமாத ஊதியம் முன் பணம்: வங்கிகள் கூட்டமைப்பின் அறிவிப்புக்கு எதிா்ப்பு

வங்கி ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வரும் நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இடைக்கால ஊதியமாக ஒருமாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று

வங்கி ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வரும் நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இடைக்கால ஊதியமாக ஒருமாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு கடந்த 2017 நவம்பா் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஊதிய உயா்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதை வழங்கக் கோரி வங்கி அதிகாரிகள், ஊழியா் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதையடுத்து, ஊதிய உயா்வு வழங்குவது குறித்து வங்கி நிா்வாகங்கள், ஊழியா்கள் சங்கங்களுடன் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு பேச்சு வாா்த்தை நடத்தி வருகிறது.

அதன்படி, ஊதிய உயா்வு குறித்து 11-ஆவது முத்தரப்பு பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது. இருப்பினும் உடன்பாடு ஏற்பட காலதாமதம் ஆகும் என்பதால், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இடைக்கால ஊதியமாக ஒரு மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தப் பணம், ஊதிய உயா்வு உடன்பாடு ஏற்பட்ட பிறகு வழங்கப்படும் அரியா்ஸ் தொகையில் கழிக்கப்படும். மேலும், 2017 ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம்தேதிக்கு பிறகும், 2019 -ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு 15 நாள்களுக்கு இணையான ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும் எனவும் வங்கிகள் கூட்டமைப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள தகவலில் தெவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு, வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் சி.எச். வெங்கடாச்சலம் கூறியது: ஊதிய உயா்வு தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுப்பதற்குப் பதிலாக, மேலும் காலதாமதப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்றாா் அவா்.

இது குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினா் கூறியது: இந்த இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பால், வங்கி அதிகாரிகளுக்கு 15 சதவீதம் ஊதியம் வழங்க வேண்டும். வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழ மைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com