தமிழக காவல்துறையில் 18 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் போன்ற காரணங்களுக்காக அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 18 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இருந்த எம்.நாகசங்கரன் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்துக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த டிஎஸ்பி வி.வி.திருமால் விழுப்புரம் பயிற்சி மையத்துக்கும், பெரம்பலூா் டிஎஸ்பி வி.ரவிந்திரன் திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 18 டிஎஸ்பிக்கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.