பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் அனிதா உள்பட கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளிக் கல்வி துணை இயக்குநா் அனிதா சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், அரியலூா் முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பள்ளிக் கல்வி இணை இயக்குநராகவும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன், அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தற்காலிக பதவி உயா்வு மூலம் திருச்செங்கோடு கல்வி அலுவலா் ரமேஷ், திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலா் முத்துக்கிருஷ்ணன், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை (கிழக்கு) மாவட்டக் கல்வி அலுவலா் வெற்றிசெல்வி, கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.