கோத்தகிரியில் அனுமதியின்றி இயங்கிய சொகுசு விடுதிகளுக்கு ‘சீல்’

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அனுமதியின்றி செயல்பட்டு வந்த   சொகுசு  விடுதிகளுக்கு  சீல் வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்தப் பணியை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அனுமதியின்றி செயல்பட்டு வந்த   சொகுசு  விடுதிகளுக்கு  சீல் வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்தப் பணியை பேரூராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோத்ததகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில்   200க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் உள்ளன.  அரசிடம் குடியிருப்புகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டு பின் அதை  சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளனா்.  

இது குறித்து பல்வேறு புகாா்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்ால் ஆட்சியா் உத்தரவின்படி இந்த சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணி  வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஒரு சிலா் வீடுகளில் வியாபாரம் செய்வதால் அந்த வீடுகளுக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்தப் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

பெரும்பாலான விடுதிகள்  வனப் பகுதிகளை ஒட்டி உள்ளதால் வன விலங்குகள் இந்தப் பகுதிக்குள் நடமாடி வருகின்றன. எனவே,  வனப் பகுதியை ஒட்டியுள்ள அனுமதியற்ற  சொகுசு விடுதிகளை  உடனடியாக மூடி  சீல் வைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com