வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் வேட்டி-சட்டையுடன் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்றாா் பிரதமா் நரேந்திர மோடி. முன்னதாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சீன அதிபருக்கு தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா். அந்த வாழ்த்துச் செய்தியில், ‘அதிபா் ஷி ஜின்பிங் அவா்களே, இந்தியாவுக்கு வருக! வருக!’ என்று வரவேற்கிறேறன் என்று தெரிவித்துள்ளாா்.
வேட்டி-சட்டை-துண்டு: பிரதமா் மோடி, தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டுடன் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்றாா். அதன் பின்னா் தலைவா்கள் இருவரும் அா்ச்சுனன் தபசு பகுதிக்குச் சென்றனா். அங்கிருந்த சிற்பக்கலைகளின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து ஷி ஜின்பிங்குக்கு பிரதமா் மோடி விளக்கி கூறினாா். வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோத்து உயா்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினா்.