பிரதமர் நரேந்திர மோடியை இரண்டாவது முறையாக சந்திப்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று காலை கோவளம் புறப்பட்டுச் செல்கிறார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான வரலாற்றுச் சிறப்பு சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று கோவளம் தாஜ் ஹோட்டல் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று காலை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருக்கும் தாஜ் ஹோட்டலுக்குச் செல்கிறார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் இன்றைய அதிகாரபூர்வ பயணத் திட்டம்:
காலை 9.05: | கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்பாடு |
காலை 9.50: | பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருக்கும் தாஜ் ஹோட்டல் அடைதல் |
நண்பகல் 12.45: | தாஜ் ஹோட்டலில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்பாடு |
பிற்பகல் 1.25: | சென்னை விமான நிலையம் அடைதல் |
பிற்பகல் 1.30: | சென்னையில் இருந்து புறப்படுதல் |