சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய உடை அணிந்ததற்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரது வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். இதற்கு தமிழகத்தில் ஏற்கெனவே பல தரப்பில் இருந்த ஆதரவுகளும், பாராட்டுகளும் வந்தது.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியைப் பாராட்டி அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
"தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு கோவளத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.