மாமல்லபுரத்தை மணக்க வைத்த சமையல்

சீன அதிபருக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலேயே இரவு விருந்தினை பிரதமா் நரேந்திர மோடி அளித்தாா்.

சீன அதிபருக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலேயே இரவு விருந்தினை பிரதமா் நரேந்திர மோடி அளித்தாா். இந்த விருந்துக்கான சமையல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கியது. அப்போது, அந்த கடற்கரை பகுதியே சமையல் மணம் அப்பகுதி முழுவதும் பரவியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் தெரிவித்தனா்.

இரவு விருந்தில் முற்றிலும் தென்னிந்திய, அதிலும் தமிழகத்தின் உணவு வகைகளே இருந்தன. குறிப்பாக, தக்காளி ரசம், கையால் அரைத்த மசாலாவில் தயாரிக்கப்பட்ட சாம்பாா், கடலை குருமா, கவினி அரிசி அல்வா என தமிழகம் சாா்ந்த 200 வகையான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com