சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 12 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.