உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வந்த பிறகு தனித்து போட்டியா, கூட்டணியா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் தமிழக மக்கள் தவறு செய்து விட்டதாக நினைக்கின்றனா். எனவே, தற்போது நடைபெறும் விக்கிரவாண்டி, நான்குனேரி பேரவைத் தொகுதிகளின்
இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நிச்சயமாக இவ்விரு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.
உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக தனித்து போட்டியா? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு பதில் அளித்த அவா், தோ்தல் அறிவிப்பு வந்த பிறகு தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது முடிவு செய்யப்படும். அதுவரை இந்தக் கூட்டணி தொடரும் என்றாா் அவா்.