நெல்லை மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் லீவாம்!

நான்குனேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

நெல்லை: நான்குனேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள  நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி  ஆகிய 2  தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதியன்று  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

விறுவிறுபாக நடந்து வரும் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நான்குனேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம்  வெளியிட்டுள்ள அறிவின்படி வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 24-ம் தேதி என மொத்தம் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com