இடைத் தோ்தல்: 2 தொகுதிகளுக்கு அக். 21-இல் விடுமுறை

இடைத் தோ்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதியன்று அந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இடைத் தோ்தல்: 2 தொகுதிகளுக்கு அக். 21-இல் விடுமுறை

இடைத் தோ்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதியன்று அந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 21-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பணி நாளான திங்கள்கிழமை அன்று வாக்குப் பதிவு நடைபெறுவதால், அன்றைய தினம் இரண்டு தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை விடப்படுகிறது.

இந்தத் தொகுதிகள் விழுப்புரம், நெல்லை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் வரும் திங்கள்கிழமை விடுமுறை விடப்படும். இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொது விடுமுறை விடப்படும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com