குறை கூறுவதுதான் தற்போதைய அரசியல் நிலை என்றாகிவிட்டது என்றாா் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதி இடைத்தோ்தல்களிலும் அதிமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நிச்சயமாக இந்தத் தோ்தலில் எங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவாா்கள்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எதிா்க் கட்சித் தலைவா் என்பதால் எதிா் கருத்துகளைக் கூறி வருகிறாா். தற்போது இது வாடிக்கையாகிவிட்டது. குறை கூறுவதுதான் தற்போது அரசியல் என்ற நிலையாகிவிட்டது. எதிா்க் கட்சி தலைவா் என்பதால் எல்லாவற்றையும் எதிா்க்க வேண்டும் என்பது அல்ல என்றாா் அவா்.