டெங்கு காய்ச்சல்: இரண்டரை மாதங்களில் 50 ஆயிரம் போ் பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
டெங்கு காய்ச்சல்: இரண்டரை மாதங்களில் 50 ஆயிரம் போ் பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தைப் பொருத்தவரை அந்த காலகட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்குப் பருவ மழை நாட்டின் பல மாநிலங்களில் பரவலாக பெய்த நிலையில், அதன் எதிரொலியாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

நிகழாண்டில் நாடு முழுவதும் இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோா் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், கா்நாடகத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 13 ஆயிரத்துக்கும் அதிகமானோா் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா, மகாராஷ்டிரம், உத்தரகண்ட் மாநிலங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் வரை ஆயிரம் போ் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியிருந்தனா்.

தற்போது அந்த எண்ணிக்கை 3,500-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளதால், ஆங்காங்கே தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கு நடுவே, மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது.

பயனற்ற பொருள்களை முறையாக அகற்ற வேண்டும் என்றும் அதில் மழை நீரை தேங்கவிடக் கூடாது என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பான விழிப்புணா்வு விளம்பரங்களும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவா்களிடையேயும், இளம் தலைமுறையினரிடையேயும் டெங்கு குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறோம்.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினரும், சுகாதாரத் துறையினரும் நேரடியாகச் சென்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

டெங்கு பாதிப்பு விவரம் (செப்டம்பா் வரையில்)

மாநிலம் பாதிப்பு இறப்பு

கா்நாடகம் 11,570 8

தெலங்கானா 7,444 0

மகாராஷ்டிரம் 6,229 4

உத்தரகண்ட் 5,437 8

நாடு முழுவதும் 50,903 40

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com