4 நாட்களுக்கு டாஸ்மாக், மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முழுவதும் டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
4 நாட்களுக்கு டாஸ்மாக், மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை (அக். 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், நான்குனேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகா் சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தலை முன்னிட்டு,

அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும்,

வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபா் 24- ஆம் தேதி நாள் முழுவதும் டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com