நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பிற்பகல் 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 76.41 சதவீதமும், நான்குனேரி தொகுதியில் 62.32 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதேசமயம், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.