திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்சென், வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
சுமாா் 16 மணி நேரங்களுக்கும் மேலாக குழந்தையை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா். அதுமட்டுமல்லாமல் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தற்போது வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு குழந்தை சுஜித்தை மீட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது,
மனம் கனக்கிறது!
குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம்.
அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்.
தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்!
என்று தெரிவித்துள்ளார்.