குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் கரை சேர்ந்தன 3 படகுகள்!

கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் 3 படகுகள் கரை சேர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் 3 படகுகள் கரை சேர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து கடந்த வாரம் 9 படகுகளில் 90 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் திட்டமிட்டபடி அந்த படகுகள் கரை திரும்பாததால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். 

இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் 3 படகுகள் கரை சேர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படகுகளில் இரண்டு படகுகள் கொச்சியிலும், ஒரு படகு கோவாவிலும் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் பயணித்த 30 மீனவர்கள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளனர்.

தற்போது மீதமுள்ள 5 படகுகளில் உள்ள 60 மீனவர்கள் குறித்த செய்திக்காக உறவினர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

அரசு தரப்பிலும் தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com