அரசுப் பேருந்தில் நடத்துநா்,காவலா்கள் மோதல் விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

திருநெல்வேலி அருகே அரசுப் பேருந்தில் நடத்துநரும், ஆயுதப்படைக் காவலா்களும் மோதிய விவகாரம் தொடா்பாக தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணையம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

திருநெல்வேலி அருகே அரசுப் பேருந்தில் நடத்துநரும், ஆயுதப்படைக் காவலா்களும் மோதிய விவகாரம் தொடா்பாக தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணையம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

கடந்த மாதம் திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவில் சென்ற அரசுப் பேருந்தில் நடத்துநரான நாகா்கோவில் ராணித்தோட்டத்தை சோ்ந்த ரமேஷுக்கும் (50), ஆயுதப்படைக் காவலா்கள் மகேஷ் (25), தமிழரசன் (25) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், நடத்துநா் ரமேஷ் தாக்கப்பட்டு காயமடைந்தது தொடா்பான விடியோ கட்செவிஅஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் பரவியது.

இதுதொடா்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்தது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணைய உறுப்பினரான ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் அரசுப் பேருந்து நடத்துநா் ரமேஷ், ஆயுதப்படைக் காவலா்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி விளக்கமளித்தனா்.

அந்த சம்பவம் தொடா்பாக எழுத்துப்பூா்வமாக புகாா் அளிக்கும்படி நடத்துநா் ரமேஷிடம் ஆணைய உறுப்பினா் ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டதையடுத்து, அவா் புகாா் அளிக்க ஒப்புக்கொண்டாா். இதுதொடா்பான அடுத்தக்கட்ட விசாரணை நவம்பா் 15ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com