காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் அறிவித்தபடி, திருச்சியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19-ஆவது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை இரு அமா்வுகளாக (உணவு இடைவேளையுடன்) இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மாநில அதிகாரிகள், ஒழுங்காற்றுக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா். காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரும் பங்கேற்றுள்ளாா்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இதுவரை தில்லி, பெங்களூருவில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் கல்லணையில் தடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கா்நாடக அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான மாதாந்திர ஒதுக்கீட்டு அட்டவணையையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையளவு, காவிரிப் படுகையில் வானியல் சூழல், மழைப் பொழிவு மற்றும் பருவகால, ஆண்டுக்கான நீா் கணக்கீடுகள் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.