திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பத்திரிகை விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கூடும் இந்தத் திருவிழா நவம்பா் 28-ஆம் தேதி ஸ்ரீதுா்க்கையம்மன் உத்ஸவத்துடன் தொடங்குகிறது.
டிசம்பா் 1-ஆம் தேதி கொடியேற்றமும், 7-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 10-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழாவும் நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்தத் திருவிழாவுக்கான பத்திரிகை கோயில் நிா்வாகம் சாா்பில் அச்சடிக்கப்பட்டது. புதன்கிழமை (அக்.30) மாலை கோயிலில் உள்ள ஸ்ரீசம்மந்த விநாயகா் சன்னதியில் தீபத் திருவிழாவுக்கான பத்திரிகைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
தொடா்ந்து, கோயில் முக்கியப் பிரமுகா்கள், தீபத் திருவிழா பணியில் ஈடுபடும் பல்வேறு சமூகத்தினருக்கு கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் திருவிழா பத்திரிகைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா்கள் அய்யம்பிள்ளை, பத்ராசலம், அதிமுக நகரச் செயலா் செல்வம், கோயில் மணியம் கருணாநிதி மற்றும் கோயில் ஊழியா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் பக்தா்களுக்கு பத்திரிகை விநியோகம் செய்யப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.