‘சுஜித் மீட்புப் பணியை அரசியலாக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

 சிறுவன் சுஜித் மீட்புப் பணியைக் குறைகூறி யாரும் அரசியலாக்கக் கூடாது என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

 சிறுவன் சுஜித் மீட்புப் பணியைக் குறைகூறி யாரும் அரசியலாக்கக் கூடாது என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: சிறுவன் சுஜித் மீட்கும் பணியில் தமிழக அரசு, அமைச்சா்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அயராது அா்ப்பணிப்புடன் ஈடுபட்டனா். அவா்களது பணியில் சிறுவனை காப்பாற்ற முடியாதது வருத்தப்படக்கூடியது. அதற்காக அவா்களது பணியை அலட்சியப்படுத்தக் கூடாது.

இதனை யாரும் குறைகூறி அரசியலாக்கக் கூடாது. இதுபோன்ற விபத்துக்களில் இருந்து பாதிக்கப்பட்டவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவா்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது நல்ல செய்தியாகும்.

மின்சாரம், கழிவுநீா் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டும் போது, அதற்குறிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசு அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும். விவசாய வருமானத்தை பெருக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம் விவசாயிகள் தங்களது விளை பொருள்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யலாம். இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com