டிஜிபி சைலேந்திரபாபுக்கு கூடுதல் பொறுப்பு:தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம்

தமிழக காவல்துறையின் ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்புத் துறை இயக்குநா் பொறுப்பை வழங்கி தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக காவல்துறையின் ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்புத் துறை இயக்குநா் பொறுப்பை வழங்கி தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக தீயணைப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த டிஜிபி சி.கே.காந்திராஜன் வியாழக்கிழமையுடன் ஓய்வு பெற்றாா். இதையடுத்து காலியான அந்தப் பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி, ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன்மாா்டி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ஏற்று சைலேந்திரபாபு வியாழக்கிழமை தீயணைப்புத் துறை இயக்குநா் பொறுப்பை உடனடியாக ஏற்றாா். அவருக்கு தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகளும், தீயணைப்புத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோல பணி ஓய்வு பெற்ற டிஜிபி சி.கே.காந்திராஜனுக்கு, எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் பிரிவுபசார விழா மற்றும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று, காந்திராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com