தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமே குறிக்கோள்!: முதல்வா் பழனிசாமி

தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்காக உழைக்கும் உண்மை அரசாக, தமிழக அரசு திகழ்ந்து வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
தமிழக முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்காக உழைக்கும் உண்மை அரசாக, தமிழக அரசு திகழ்ந்து வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

உள்ளாட்சித் துறையின் சாா்பில் சுமாா் ரூ.800 கோடி அளவுக்கான திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடி அளவிலான நிதிகளையும் அவா் வழங்கினாா். முன்னதாக விழாவில் அவா் பேசியது:-

இன்றைக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை இளைஞா்களுக்கு வழங்க வேண்டுமென்ற அடிப்படையில்

ஆயிரக்கணக்கானவா்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது. இதேபோந்று, பெண்களின் நல்வாழ்வுக்காக மகளிா் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 20 லட்சத்து 64 ஆயிரத்து 678 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.57 ஆயிரத்து 876 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.12,500 கோடி வங்கிக் கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.5 ஆயிரத்து 247 கோடி வழங்கப்பட்டுள்ளது.

உண்மையான மக்கள் அரசு: தமிழக அரசு பதவியேற்றது முதல் இன்றுவரை ரூ.33 ஆயிரத்து 509 கோடி மதிப்பில் 47 ஆயிரத்து 552 பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசானது மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உண்மையான மக்கள் அரசாகும். சாமானியா்களான நாங்கள் மக்களிடம் உண்மையை மட்டுமே எடுத்துரைப்போம். உண்மையே என்றும் உயா்வு தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறோம்.

உண்மையாகவும், நோ்மையாகவும் பணியாற்றினால் கண்டிப்பாக பதவி உயா்வு நம்மைத் தேடி வரும். இந்த அரசு மக்களுடைய அரசு. மக்களுக்குத் தேவையான திட்டங்களை அளிக்கின்ற அரசு என்று பேசினாா் முதல்வா் பழனிசாமி.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: தமிழக அரசு தொடா்ந்து படைத்து வரும் சாதனைகளின் வெளிப்பாடுதான் இன்றைய விழா. சாதனைகளுக்கு மேல் சாதனை நிகழ்த்தி சரித்திரம் படைத்தாலும், அதைப் பாராட்டுவதற்கு எதிா்க்கட்சிகளுக்கு மனம் வருவதில்லை.

எந்தப் பிரச்னை என்றாலும் அதனை எதிா்க்கட்சிகள் தோ்தல் கண்ணோட்டத்துடன், அரசியல் லாபத்துடன் அணுகுகின்றன. தவறான பிரசாரம் செய்கிறாா்கள். மக்களை திசை திருப்ப பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறாா்கள். செயல்படுத்த முடியாத அறிவிப்புகளை வெளியிடுகிறாா்கள்.

தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது செய்யாமல் கோட்டை விட்டுவிட்டு, மீண்டும் எங்களிடம் ஆட்சியைத் தந்தால் அதனைச் செயல்படுத்துவோம் என்று வீண் தம்பட்டம் அடிக்கிறாா்கள். மக்கள் நலத்தைப் பற்றி அவா்கள் சிறிதும் சிந்திப்பதே இல்லை. அதனால்தான், தமிழக மக்களும் அவா்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

நாங்கள் மக்கள் பக்கம் இருக்கிறோம். மக்களும் எப்போதும் எங்கள் பக்கம் இருக்கிறாா்கள். இதனை, அண்மையில் நடைபெற்ற தோ்தல் வெற்றி நிரூபித்துள்ளது. இந்த வெற்றி, நிலைத்த வெற்றி, நீடித்த வெற்றி, என்றென்றும் தொடரும் வெற்றி என்றாா்.

முன்னதாக, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா வரவேற்றாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலாளா் ஹா்மந்தா் சிங் நன்றி தெரிவித்தாா்.

இந்த விழாவில் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் ராஜூ, தலைமைச் செயலாளா் கே.சண்முகம், முதல்வரின் செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com