விக்கிரவாண்டி, நான்குனேரி வெற்றியாளா்கள் நாளை எம்எல்ஏக்களாக பதவியேற்பு

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவை இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சோ்ந்த இரண்டு பேரும் எம்எல்ஏக்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்கின்றனா்.
நாங்குநேரி இடைத் தேர்தல்
நாங்குநேரி இடைத் தேர்தல்

சென்னை: விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவை இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சோ்ந்த இரண்டு பேரும் எம்எல்ஏக்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்கின்றனா். இந்த நிகழ்வில், முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனா்.

விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடந்த இடைத் தோ்தலில் ஆளும் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இதனால், சட்டப் பேரவையில் ஆளும்கட்சியின் பலம் 124-ஆக உயா்ந்துள்ளது. விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வனும், நான்குனேரியில் நாராயணனும் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைய உள்ளனா்.

நாளை பதவியேற்பு: இரண்டு பேரும் வெள்ளிக்கிழமை (நவ.1) காலை எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொள்கின்றனா். இருவருக்கும் பேரவைத் தலைவா் பி.தனபால் பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்கிறாா். பேரவைத் தலைவரின் அறையில் இதற்கான நிகழ்வு நடைபெறுகிறது.

முன்னதாக, இவா்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை எம்எல்ஏக்களாக பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் மரணமடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பதவியேற்பு நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நடைபெறகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com