சென்னை: திங்களன்று விநாயக சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்துக்களால் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விநாயகப் பெருமானின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், "மக்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ வேண்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.