பேரவைத் தேர்தல்: மக்கள் சந்திப்பு கமல் திட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முன்கூட்டியே மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.


சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முன்கூட்டியே மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 4 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது.  நகர்ப்புறங்களில் இன்னும் அதிக அளவில் வாக்குகள் பெற்றது. இதனால் கமல் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதுடன், கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக கட்சியின் நிர்வாக அமைப்புகளை மாற்றியமைத்து வருகிறார்.
இந்த நிலையில், 2021-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை அனைத்துக் கட்சிகளுக்கும் முன்பே தொடங்கத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் இந்தப் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com