4 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழக பாஜக தலைவர் நியமனத்தில் எந்த இழுபறியும் இல்லை. தேசிய தலைமை முடிவு செய்யும் தலைவரை பாஜக தொண்டர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.
ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதும் நாட்டின் ஜிடிபி 5% இருந்தது. அதை அவர் நல்ல பொருளாதாரம் என்றார். அப்போது பேசியது நல்ல வாயா? இப்போது பேசுவது வேற வாயா? ஆட்டோ மொமைல்துறை வீழ்ச்சி சாதாரணமானதுதான் என அந்த துறையை சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.
தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். இவ்வாறு அவர் கூறினார்.