பாஜகவை மக்கள்தான் தோற்கடித்தனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் இல்லத் திருமண விழா திருப்பூரில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம். பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது.
முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான். கூறியபடி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்தத் தயார். இவ்வாறு அவர் கூறினார்.