தமிழ்நாடு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக இந்து சமய அறநிலையங்கள் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வெள்ளிக்கிழமை
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக இந்து சமய அறநிலையங்கள் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான கடைகள், குடியிருப்பு என நான்கு கட்டடங்களில் இருந்தவர்கள் வாடகை ஏதும் செலுத்தாமல் ஆக்கிரமித்து இருந்தனர். அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து வாடகைதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வெளியேற்றப்பட்டு, கடைகள், வீடு ஆகியன பூட்டி சீல் வைக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையங்கள் துறை தெரிவித்துள்ளது.