சென்னை: சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதமும் , 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இதனை மீறும் தனியார் அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான எடுக்கப்படும்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.