சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் அமைத்தால் அபராதம், சிறை: மாநகராட்சி அதிரடி    

சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்

சென்னை: சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதமும் , 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இதனை மீறும் தனியார் அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான எடுக்கப்படும்.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com