மேற்கு வங்க போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வங்கதேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவன் அசதுல்லா ஷேக் (35) என்ற ராஜா சென்னையில் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டான்.
சென்னையில் கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கியிருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நீலாங்கரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷேக் அசதுல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.