வங்கிகளில் இனி விவசாயத்துக்கான நகைக் கடன் வழங்கப்படாது என்று உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயத்துக்கு 4% வட்டியில் வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதுவரை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்படுவதால், வங்கிகளில் இனி விவசாயத்துக்கான நகைக் கடன் வழங்கப்படாது என்று வங்கிகள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும், அதே சமயம், ஏற்கனவே விவசாயத்துக்கான நகைக் கடன் பெற்றிருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.