மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போன்று கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு இனிவரும் காலங்களில் ஒற்றைச்சாளர ஆன்லைன் முறையில் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டது.
துணைவேந்தர்கள், உயர்க்கல்வி ஆசிரியர்களுடன் தலைமைச் செயலர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக விரைவில் தமிழக அரசு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.