நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு அவரது மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகள் செய்திட ஒருமாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதைத்தொடர்ந்து, அவர் ஜூலை 25-ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார்.  ஆகஸ்ட் 25-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டியிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com