தலைமைச் செயலகத்தில் 2வது நாளாக இன்றும் நல்ல பாம்பு பிடிபட்டது

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் ஒரு நல்ல பாம்பு பிடிபட்டிருப்பது ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை


சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் ஒரு நல்ல பாம்பு பிடிபட்டிருப்பது ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே சென்னை தலைமைச் செயலத்தில் நேற்று காலை புகுந்த நல்ல பாம்பு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் தளத்தில் நல்ல பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

நுழைவு வாயில் எண் 4 அருகே நேற்று புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டதை அடுத்து, இன்றும் மீண்டும் ஒரு நல்ல பாம்பு பிடிபட்டிருப்பது ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com