மதுவை ஒழித்து இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்ட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மதுவை ஒழித்திட என் தலைமையில் செப்டம்பர் 15- இல் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தொண்டர்களை அனுப்ப எல்லாத் தலைவர்களையும் சந்தித்து வேண்டினேன். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழக அரசு மதுவை ஒழித்து, வரும் அக்டோபர் 2-இல் காந்தியின் பிறந்த நாளை மதுவில்லாத தமிழகமாகக் கொண்டாட வேண்டும். இதன் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.