தென்னிந்திய நடிகர் சங்கப் பிரச்னைக்கு காரணமான, நடிகர் விஷாலும், ஐசரி கணேஷும் சங்கத்திலிருந்து விலகவேண்டும் என்று, நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
பழனியில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, நிலத்தை மீட்டு புதிய கட்டடம் திறக்கப்படும் நேரத்தில், நாமக்கல்லைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்றது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களது அகந்தையை விட்டு பிரச்னையைத் தீர்க்க முன்வர வேண்டும் அல்லது பிரச்னைக்கு காரணமான நடிகர் விஷாலும், ஐசரி கணேஷும் சங்கத்தின் நலன் கருதி அதிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்றார்.