ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 4 மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக தெரிகிறது. இதையடுத்து, இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் தற்போது ஜாஃப்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மீன்வளத் துறை துணை இயக்குநர் யுவராஜ் தெரிவித்தார்.
முன்னதாக, இதேபோல் கடந்த 9-ஆம் தேதி புதுக்கோட்டையில் இருந்து 4 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்களும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.