காஞ்சிபுரத்தில் மழை: அனந்தசரஸ் திருக்குளத்தின் நீராழி மண்டபம் நிரம்பியது

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில்  உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளியுள்ள நீராழி மண்டபம் நிரம்பியுள்ளது. 
மழைநீர் சூழ்ந்து காணப்படும் அனந்தசரஸ் திருக்குளம்.
மழைநீர் சூழ்ந்து காணப்படும் அனந்தசரஸ் திருக்குளம்.

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில்  உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளியுள்ள நீராழி மண்டபம் நிரம்பியுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது. 

விழா  நிறைவு பெற்றதும் அத்திவரதர் கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் எழுந்தருளினார். 

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அத்திவரதர் அனந்தசயனத்தில் வைக்கப்பட்டுள்ள நீராழி மண்டபம் நீரால் சூழ்ந்து வெளியில் தெரியாத அளவுக்கு நீரின் மட்டம்  உயர்ந்து காணப்படுகிறது. இதனை ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து பார்த்துச் செல்கின்றனர். சில பக்தர்கள் கோயில் வளாகத்தில் 48 நாள்களும் அத்திவரதர் அருள்பாலித்த வஸந்த மண்டபத்தைப் பார்த்து விட்டு செல்கின்றனர்.

சனிக்கிழமை விடுமுறை நாளாகவும், பெருமாளுக்கு உகந்த நாளாகவும் இருந்ததால் வரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும் தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் ஆந்திரத்திலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். 
சுவாமியை தரிசனம் செய்த பின், அத்திவரதர் எழுந்தருளியிருக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தையும் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காரணமாக அனந்தசரஸ் திருக்குளம், கோயில் நுழைவு வாயில் ஆகிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com