மூன்று அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மூன்று அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மூன்று அணைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் மூன்று அணைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிசான பருவத்துக்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க ஏதுவாக முன்கூட்டியே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 
இந்தக் கோரிக்கையை ஏற்று, மூன்று அணைகளில் இருந்தும் தாமிரபரணி ஆற்றின் கீழுள்ள எட்டு அணைக்கட்டுகள், 11 கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பயிர்களைக் காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம், பிசான பருவ முன்னேற்பாடு பணிகளையும் செய்ய முடியும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடி நீர் திறந்து விடப்படும். 
கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் தாமிரபரணி பாசனத்தின் ஆறு அணைக்கட்டுகளின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏழு கால்வாய்கள் மூலம் 40 ஏக்கர் பாசன நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 2 அணைக்கட்டுகளின் கீழுள்ள 4 கால்வாய்கள் மூலம் 46 ஆயிரத்து 107 ஏக்கர் பாசன நிலங்களும் என மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 
விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் அடைய வேண்டும் என தனது செய்திக் குறிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com