சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சேதுராஜ் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இருவரது குடும்பங்களுக்கும் முதல்வர் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.